புரோ கபடி 2023 தமிழ்நாடு, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பில்லை?
புரோ கபடி தொடரின் 10-ஆவது சீசன் தற்போது நடுக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், 5-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான நொய்டாவில் நடைபெற்று வருகிறது. குஜராத், புனே, ஜெய்ப்பூர், மும்பை, ஹரியானா, தில்லி, பெங்களூரு ஆகிய அணிகள் வலு வான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், பெங்கால், உத்தரப்பிர தேசம், பாட்னா ஆகிய அணிகள் சுமா ரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரு கிறது. ஆனால் நட்சத்திர அணிகளில் ஒன்றான தமிழ்நாடு அணியும், கபடி உலகின் முக்கிய நட்சத்திர வீரர் களில் ஒருவரான பவன் செராவத் விளை யாடி வரும் தெலுங்கு டைட்டன்ஸ் அணி யும் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றன. இதில் தமிழ்நாடு அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி களை மட்டுமே பெற்றுள்ள நிலையில், 13 புள்ளிகளுடன் 11-ஆவது இடத்தில் உள்ளது. அதே போல 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள தெலுங்கு டைட்ட ன்ஸ் அணி ஒரே ஒரு வெற்றியுடன் கடைசி இடத்தில் உள்ளது. இனிவரும் ஆட்டங்களில் இரு அணிகளும் தோல்வியை சந்திக்காமல் தொடர் வெற்றியை ருசித்தால் மட்டுமே பிளே ஆப் சுற்று பற்றி நினைத்துப் பார்க்க முடியும். ஆனால் இரு அணிகளின் ஆட்டத்திறனை உற்றுநோக்கினால் ஏறக் குறைய இரு அணிகளுக்கும் வாய்ப்பு மிக குறைவு என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆட்டம்
குஜராத் - தில்லி
(53-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி
இடம் : கிரேட்டர் நொய்டா, உத்தரப்பிரதேசம்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம் இல்லை, சந்தா கட்டணம் செலுத்தி இருந்தால் பார்க்கலாம்)
இனி முகங்களுக்காக வெற்றி கிடைக்காது
தற்போதைய புரோ கபடி உலகில் பிரதீப் நார்வல் (உத்தரப்பிரதேசம்), நவீன் (தில்லி), பவன் செராவத் (தெலுங்கு டைட்டன்ஸ்), நரேந்தர் (தமிழ்நாடு), மணீந்தர் சிங் (பெங்கால்) ஆகியோர் முக்கிய நட்சத்திர வீரர்களாக உள்ளனர். இவர்கள் விளையாடும் அணி நடப்பு சீசனில் கடுமையாக சொதப்பி வருகின்றன. மாறாக இரண்டாம் நிலை வீரர்கள் மற்றும் புதுமுக வீரர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதாவது அனுபவ வீரர்கள்தான் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற நிலையை நடப்பு சீசனில் சுக்கு நூறாக நொறுக்கியுள்ளனர் இளம் வீரர்கள். இனிமே முகங்களுக்காக வெற்றி கிடைக்காது என்ற நிலையை கபடியிலும் உணரப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு அந்தஸ்தை இழக்கிறது மொஹாலி மைதானம்
ஐபிஎல் - பஞ்சாப் அணியின் “ஹோம்” மைதானமாக முல்லான்பூர்?
நாட்டின் நட்சத்திர அந்தஸ்து கொண்ட சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் முக்கியமானது பஞ்சாப் மாநிலத்தின் உள்ள மொஹாலி மைதானம். பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் வாண வேடிக்கைக்கு நிகராக அதிரடி பேட்டிங் நிகழும் என்பதால், மொஹாலி மைதானத்தில் நடைபெறும் ஆட்டங்கள் பரபரப்பாகவும், சுவாரஸ்யமிக்கதாக இருக்கும். இந்நிலையில், ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணிகளில் ஒன்றான பஞ்சாப் அணியின் ‘‘ஹோம்” மைதானமாக இது வரை மொஹாலி மைதானம் இருந்த நிலையில், இனி முல்லான் பூரில் உள்ள மகாராஜா யத்விந்தர் சிங் மைதானம் பஞ்சாப் அணியின் ‘‘ஹோம்” மைதானமாக மாற்றப்பட உள்ளதாக தக வல் வெளியாகியுள்ளது. இதற்கு ஆதாரமாக ஐபிஎல் - பஞ் சாப் அணி குழு முல்லான்பூர் மைதானத்தை பார்வையிட்டு சென்றுள்ளது. ஏற்கெனவே சமீபத்தில் நிறைவு பெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பொழுது மொஹாலி மைதா னம் புறக்கணிப்பட்ட நிலையில், தற்போது ஐபிஎல் தொடரி லும் மொஹாலி மைதானம் புறக்கணிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முல்லான்பூர் மைதானம் ரூ.230 கோடி செலவில் மொஹாலியில் உள்ள இந்திரஜித் சிங் மைதானத்தைவிட அதிக இருக்கைகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.