games

img

தேசிய அளவிலான கபடி போட்டி.... தங்கம் வென்ற வீரர்களுக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., வாழ்த்து....

கோவை:
தேசிய அளவிலான கபடி போட்டியில் தங்கம் வென்ற  கோவையை சேர்ந்த வீராங்கனைகளுக்கு கோவை எம்பி பி.ஆர்.நடராஜன் சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் ஆகஸ்ட் 6 முதல் 8 வரை 4வது தேசிய அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில், கோவை மாவட்டத்தில் இருந்து பயிற்சியாளர் சதீஷ்குமார்தலைமையில் 17 வயதுக்குட் பட்டவர்கள் மற்றும் 19 வயதுக்குட்பட்ட இரு அணிகள் என மொத்தம் 22 பேர்சென்றனர். பஞ்சாப் மற்றும் ஹரியானாவுடன் விளையாடி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர். இந்த அணியில்  கோவை ரத்தினபுரியை சேர்ந்த ரம்யா, ராதிகா என்கிற இரண்டு சகோதரிகளும் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் திங்களன்று மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில், கோவை  நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்கள் இருவருக்கும் பி.ஆர்.நடராஜன் எம்பி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

;