games

img

விளையாட்டு...

ராவல்பிண்டி டெஸ்ட்

சொந்த மண்ணிலேயே வீழ்ந்த பாகிஸ்தான்

புதிய வரலாறு படைத்த வங்கதேசம்

2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க வங்கதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டி ற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ராவல்பிண்டி நகரில் நடை பெற்று வந்த நிலையில், இந்த போட்டி யில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ் தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 448 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 565 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 117 ரன்கள் பின்னிலையுடன் இரண்டா வது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, வங்கதேசத்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடி யாமல் 146 ரன்களுக்கு சுருண்டு, வங்க தேச அணிக்கு வெற்றி இலக்காக 30 ரன்கள் நிர்ணயித்தது. 

30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக மிக எளிதான இலக்குடன் கள மிறங்கிய வங்கதேச அணி 6.3 ஓவர் களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை (30) எளிதாக எட்டியது. இதன்  மூலமாக பாகிஸ்தான் அணியை முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தி வங்கதேச அணி புதிய வர லாறு படைத்துள்ளது. அதுமட்டு மல்லாமல் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் 10 விக்கெட்டு கள் வித்தியாசத்தில் வீழ்த்திய முதல் அணி என்ற சாதனையையும் வங்கதேசம் படைத்துள்ளது.

பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் தலையை நோக்கி பந்தை எறிந்த விவகாரம்
வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹாசனுக்கு ஐசிசி நடுவர்கள் எச்சரிக்கை

22ஆவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டி ருக்கும் போது, அந்நாட்டின் ரிஸ்வான் பேட்டிங் ஆர்டர் களத்தில் நின்று கொண்டு இருந்தார். பந்துவீச வந்த வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹாசன் பந்துவீச ஓடி வரும் பொழுது, பாகிஸ்தான் பேட்டர் ரிஸ்வான், ஷாகிப் அல் ஹாசனை நிற்க சொல்லிவிட்டு, பேட்டிங் செய்ய தயாராக முயன்றார். இத னால் கோபடைந்த  ஷாகிப் அல் ஹாசன்,  பந்தை ரிஸ்வான் தலையை நோக்கி எறிந்தார். இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பயந்து கீழே குனிந்து விட்டார். இந்த விதிமீறல் சம்பவத்திற்கு கள நடுவர் மட்டுமின்றி, போட்டி நடு வர்களான ஐசிசி நடுவர்களும் ஷாகிப் அல் ஹாசனுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரோகித் சர்மாவும்... ரூ.30 கோடியும்... 

கிரிக்கெட் உலகின் முதன்மையான உள்ளூர்  டி-20 தொடரான ஐபிஎல் தொடரின் 18ஆவது  சீசன் அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடை பெற இருக்கிறது. இதற்காக வீரர்கள் மெகா ஏலம் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என்பது போன்ற விதிமுறை கள் விரைவில் வெளியாக உள்ளது.

வரும் சீசனில் ரோகித் சர்மா மும்பை அணியில் இருந்து  விலக உள்ளார். அவர் ஏலத்திற்கு வரும் பட்சத்தில் அவரை வாங்க கடும் போட்டி இருக்கும் என்ற நிலையில், ஏலத்திற்கு முன்பே அவரை வாங்க தில்லி, லக்னோ  உள்ளிட்ட அணிகள் ரூ.30 கோடியுடன் தயாராக உள்ளன. அதே போல இந்திய டி-20 அணிக்கு கேப்ட னாக இருக்கும் சூர்யகுமார் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி ஆசையில் இருக்கிறார். அவருக்கு கொல்கத்தா அணியும் கேப்டன் பதவி வழங்குவதாக ஆசையை தூண்டிவிட்டுள்ளது. ஆரம்பத்தில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய சூர்ய குமார் மீண்டும் தங்கள் அணிக்கு இழுத்து கேப்டன் பதவியை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.