ரூ.16 லட்சம் ஊதியத்தில் ஜோதிட நிறுவனம் ஒன்றை அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு நியமித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஏ.எஃப்.சி. ஆசியக் கோப்பைக் கால்பந்து தகுதிச்சுற்றில் சிறப்பாக ஆடிய இந்தியா ஆசியக்கோப்பைக்கு தகுதி பெற்றது. இதற்கு காரணம் இந்த ஜோதிடர்களின் ‘உத்வேகமூட்டல்’ என்று இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு சார்பாக கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அணி நிர்வாகி ஒருவர் பிடிஐ-செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, பயிற்சியை விட ஜோதிடம் வீரர்களுக்கு அதிக உத்வேகம் அளிக்கும். இதற்காக ரூ.16 லட்சம் ஊதியத்தில் ஜோதிட நிறுவனம் ஒன்றிடம் இந்திய கால்பந்தின் ஜாதகம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் ஆசியக் கோப்பை கால்பந்து தொடருக்காக அணிக்கு ஜோதிடர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் எனக் கூறியுள்ளார்.
இந்த கருத்தால் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு பலரும் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.