games

img

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் சிந்து

முன்னணி பேட்மிண்டன் தொடர்களில் ஒன்றான சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகளிர் ஒற்றை யர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் ஹான் யூவை 17-21, 21-11, 21-19 என்ற  செட் கணக்கில் வீழ்த்தி அரை யிறுதிக்கு முன்னேறினார்.

சாய்னா அதிர்ச்சி


நீண்டகால இடைவெளிக்கு பின்னர் பார்ம் பிரச்சனையிலிருந்து மீண்டுள்ள இந்தியாவின் சாய்னா நேவால் காலிறுதி வரை முன்னேறி அசத்திய நிலையில், காலிறுதி சுற்றில்  ஜப்பானின் ஓஹோரியிடம் 21-13,  15-21, 22-20 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார்.  சாய்னாவைப் போலவே ஆடவர்  ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிர ணோய் ஜப்பானின் நரவோகாவிடம் 12-21, 21-14, 21-18 என்ற செட் கணக் கில் வீழ்ந்தார். ஆடவர் இரட்டையர் பிரி வில் அர்ஜுன் - கபிலன் ஜோடி,  இந்தோ னேசியாவின் அஹ்ஷன் - ஹென்ட்ரா  ஜோடியிடம் 10-21, 21-18, 21-17 செட் கணக்கில் தோல்வியடைந்தது.