மொத்தம் 187 நாடுகளில் இருந்து 343 அணிகள் (2500 வீரர்கள்) பங்கேற்கவுள்ளனர். போட்டியை நடத்தும் இந்தியா சார்பாக ஆண்கள் பிரிவில் 3 அணியும், மகளிர் பிரிவில் 2 அணியும் என மொத்தமாக 30 வீரர்-வீராங்கனைகள் களம் காண உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 7 வீரர் - வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். தமிழ்நாடு குழுவிற்கு ஆலோசகராக செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசிற்கு விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு
செஸ் ஒலிம்பியாட் தொடருக்காக ஆவின் பால் பாக்கெட்டுகளில் தமிழ்நாடு அரசு விளம்பரம் செய்துள்ளது. செவ்வாயன்று இந்த விளம்பரங்கள் பால் பாக்கெட்டுகளில் வெளி யாகிய நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் வீட்டுக்கு வழங்கப்பட்ட பால் பாக்கெட்டின் புகைப் படத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து தமிழ்நாடு அரசிற்கு பாராட்டு தெரி வித்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் இடம்
தமிழ்நாடு தலைநகர் சென்னையில் இருந்து 59 கிமீ தூரத்தில் உள்ளது ஃபோர் பாய்ண்ட் ஷெரேடோன் என்ற பெயர் கொண்ட நட்சத்திர ரிசார்ட்டில் தான் 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெறு கிறது. கிழக்கு கடற்கரை சாலைக்கு அருகே உள்ள சகல வசதியும் கொண்ட இந்த ரிசார்ட் மைதானம் போன்ற பிரம்மாண்ட பசுமை நிறைந்த வளாகத்தையும் கொண்டுள்ளது. அதாவது ஒரு மினி கிரிக்கெட் போட்டியை கூட இங்கு நடத்திவிடலாம். போட்டியை ரிசார்ட் உள்ளேயும், இதர வேலைகளை வெளியே உள்ள மைதானங்களில் எளிதாக நடத்தலாம். இதுபோக அருகில் இயற்கை எழில் கொஞ்சும் லோட்டஸ் ஏரியும் இருப்பதால் இயற்கை யை கண்டுகளித்து மனநிறைவோடு போட்டியை புத்துணர்ச்சியுடன் எதிர்கொள்ளும்படி தமிழ்நாடு அரசு ஆய்வு செய்து இந்த ரிசார்ட்டை தேர்வு செய்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வரும் வீரர் - வீராங்கனைகள் எவ்வித மாற்றமின்றி தங்கள் பகுதியை போல தங்கவும், விளையாடவும், உலாவவும் ஃபோர் பாய்ண்ட் ஷெரேடோன் ரிசார்ட் நிர்வாகம் தனியாக சிறப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது.