செஸ் உலகின் மிகப்பெரிய திருவிழாவான ஒலிம்பியாட் தொடரின் 44-வது சீசன் தமிழ்நாட்டின் முக்கிய விளையாட்டு அரங்கான சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பாரம்பரிய கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது.
இன்றைய நிகழ்வுகள்
மூன்றாவது நாள்
காலை 9:30 மணிக்கு கேப்டன்கள் சந்திப்பு
மதியம் 3 மணிக்கு மேல் முதல் சுற்று ஆட்டங்கள்
(பார்வையாளர்கள் கவனத்திற்கு : செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெறும் அனைத்து நாட்களிலும் மாலையில் தான் போட்டிகள் நடக்கும். காலையில் போட்டிகள் கிடையாது.)
மொழி பிரச்சனைக்கு “நோ”
பொதுவாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமான பிரச்சனையாக இருப்பது மொழி தான். தன் உணர்வை வெளிப்படுத்த முடியாமல், விரும்பியதை கேட்டு உண்ண முடியாமல், சென்ற இடத்தின் சிறப்பை அறிய முடியாமல் வெளிநாட்டு வீரர் - வீராங்கனைகள் திணறுவார்கள். இந்த பிரச்சனைக்கு 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்தும் தமிழ்நாடு அரசு (இந்தியா) முற்றுப்புள்ளி வைத்தது. செஸ் ஒலிம்பியாட் கோர்ட்டில் வெளிநாட்டு வீரர்- வீராங்கனைகள் அணியின் குழுக்களுக்கு உதவிட சர்வதேச மொழிகளில் புலம் வாய்ந்த 400-க்கும் மேற்பட்டவர்களை தமிழ்நாடு அரசு சிறப்பு ஊழியர்களாக நியமித்துள்ளது. இதனால் செஸ் ஒலிம்பியாட் கோர்ட் பகுதியில் மொழி பிரச்சனை இல்லை. சகஜமாக பேசலாம், உதவி கேட்கலாம், சொந்த மண் போல உரையாடலாம்.
புயலுக்குப் பின் அமைதி
பொதுவாக சர்வதேச விளையாட்டுப் போட்டி நடைபெறும் இடம் வீரர் - வீராங்கனைகளின் அதிரடி, ரசிகர்களின் உற்சாகம் என கடலிலிருந்து தரைபகுதிக்கு வரும் புயலின் சத்தத்தை போன்று இருக்கும். ஆனால் சர்வதேச விளையாட்டுப் போட்டி களில் ஒன்றான செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெறும் இடம் அரசு பொதுத்தேர்வு அறை நடைபெறும் இடம்போன்று அமைதியாக இருக்கும். அதாவது “குண்டுஊசி விழுந்தால் கூட ஒலி கேட்கும் அளவிற்கு அமைதியாக இருக்கிறது” என்று கூறுவது போல மிகவும் அமைதியாக இருக்கும் செஸ் ஒலிம்பியாட் கோர்ட். காரணம் கைக்கு, மூளைக்கு மட்டுமே வேலை. வாய்க்கு வேலை இல்லை.ஆக்ரோசமான விளையாட்டு இல்லை என்பதால் வெற்றி உற்சாகத்திற்கும் வேலை இல்லை.