games

img

கேலோ இந்தியா ‘களரி பயிற்று’ போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர்

திருச்சிராப்பள்ளி, ஜன.28 - தேசிய அளவிலான கேலோ இந்தியா களரிபயிற்று விளையாட்டுப் போட்டியில் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் வி.சுர்ஜித் வெள்ளிப் பதக்கம் வென்றார். தேசிய அளவிலான கேலோ இந்தியா களரி பயிற்று விளையாட்டுப் போட்டி திருச்சி அண்ணா உள்விளையாட்டரங்கில் சனிக்கிழமை தொடங்கி யது. போட்டியை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தொடங்கி வைத்தார். இப்போட்டி ஜனவரி 29  (திங்கள்) வரை 3 நாட் களுக்கு நடைபெறும்.  

இதில் கேரளம், தமிழ கம், புதுச்சேரி, கர்நாடகம், உத்தரப்பிரதேசம், தில்லி, ஹரியானா, மத்தியப்பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 16  மாநிலங்களைச் சேர்ந்த 103 வீரர்கள், 87 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். சுவடுகள், கெட்டுக்காரி (கம்புச் சண்டை), வாள் சண்டை, ஹைகிக் ஆகிய 4 பிரிவு களில் 18 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் தனிநபர் மற்றும் குழு போட்டிகள் நடைபெறுகின்றன.

முதல் நாளான சனிக்கிழமை காலை, மகளிருக்கான கம்புச் சண்டை குழு போட்டியில் கேரளத்தைச் சேர்ந்த அனுகிரஹா - துர்கா இணை முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தையும், அதே மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீலட்சுமி - அயனா இணை 2 ஆம் இடம் பிடித்து வெள்ளியை யும், அசாமைச் சேர்ந்த சமிக்ஷா பேகம் - ஜிக்யாசா அம்ஃபி இணை மற்றும் கேரளத்தைச் சேர்ந்த வித்யா லட்சுமி - வைகாலட்சுமி இணை 3 ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

பிற்பகலில் நடைபெற்ற ஆண்களுக்கான களரி பயிற்று போட்டியில், சுவடுகள் என்ற தலைப்பி லான தனிநபர் போட்டியில் கேரளத்தின் அபிஷித் அசோகன் முதலிடம் பிடித்து தங்கமும், தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் ரெட்டியார் பாளையத்தைச் சேர்ந்த வி.சுர்ஜித் இரண்டாமிடம் பிடித்து வெள்ளியும், ஹரியானாவைச் சேர்ந்த பிரணவ் ஜித்தேஷ் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த தேவநாராயணன் ஆகியோர் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.