மாயமான விமானத்தைக் கண்டுபிடித்த ஆழ்கடல் ஆய்வுக்கலம்
வங்காள விரிகுடாக் கட லினடியில் உள்ள வாயு நிலை ஹைடிரேட் வேதிப் பொருட்கள் மின் ஆற்றல் தரக்கூடிய வளங்களாகும். இவற்றை ஆய்வு செய்வதற்காக ஆழ்கடல் திட்டம் ஒன்று இந்திய அரசால் தீட்டப்பட் டது. அதற்காக OMe எனப்படும் பெருங்கடல் தாது ஆய்வுக்கலம் ஒன்றையும் நார்வே நாட்டிடமி ருந்து வாங்கியுள்ளது. இந்த ஆளில்லா ஆய்வுக்கலம் மூலம் 6000 மீட்டர் ஆழம் வரை சென்று ஆய்வு செய்ய இயலும். வணிக, அறிவியல் ஆய்வுகள் மற்றும் பாது காப்பு துறையில் இது பயன்படும். இந்த ஆய்வின்போது இன் னொரு விசயமும் தற்செயலாக நிகழ்ந்துள்ளது. 2016இல் சென்னை தாம்பரம் விமான படைத்தளத்திலி ருந்து 29 வீரர்களுடன் சென்ற ஒரு விமானம் நடுவானில் காணாமல் போனது. OMeஇன் உதவியோடு தேசிய பெருங்கடல் தொழில்நுட்பக் கழகம்(NIOT) 3400 மீட்டர் ஆழத்தில் மல்டி பீம் சோனார்(SONAR), செயற் கைத் துளை சோனார் மற்றும் உயர் தெளிவு புகைப்பட நுட்பம் ஆகிய வற்றை பயன்படுத்தி காணாமல் போன விமானத்தின் பாகங்களை கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம் அந்தக் குடும்பத்தாருக்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது. 2.1 டன் எடையுள்ள OMe ஆழ்கடல் ஆய்விற்கு மிகவும் பயனுள்ளது என்கிறார் ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தின் தலைவராக இருக்கும் முனைவர் எஸ்.ரமேஷ். இது இந்திய ஆய்வுக் கலம் சாகர் நிதியிலிருந்து 15 முறை ஆழ்கடலி னுள் சென்றுள்ளது. தாதுப் பொருட்களை ஆய்வு செய்வதோடு இந்தியப் பெருங்கடலின் பல்லுயிர் வளத்தையும் ஆவணப்படுத்த இய லும். 7500 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையைக் கொண்ட இந்தியா, கடல் வளத்தை நிலைத்த முறை யில் பயன்படுத்துவது நாட்டின் முன்னேற்றதிற்கு முக்கியமானது ஆகும் என்கிறார் நியாட்டின் இயக்குநர் ராமதாஸ்.
நுரையீரல் தொற்றுகளை எதிர்க்கும் மைக்ரோஃபேஜஸ்
நமது நுரையீரலை சுற்றி திரவம் நிரம்பிய பை ஒன்று உள்ளது. அது வெளியிலி ருந்து ஏற்படும் காயங்களிலிருந்து நுரையீரலை பாதுகாப்பதற்கு மட்டுமே என்று கருதப்பட்டிருந்தது. ஆனால் இப்போது கிரு மியியல் அறிவியலாளர் ஜூலியட் மாரிஸன் குழுவினர் நடத்திய ஒரு ஆய்வில் அது தொற்றுகளை எதிர்க்கும் மேக்ரோஃஃ பேஜஸ் எனப்படும் செல்களையும் கொண்டி ருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. இந்தக் கட்டுரை அமெரிக்க தேசிய அறிவியல் கழக மாநாட்டில் வெளியிடப்பட்டது. ஒரு தொற்று ஏற்படும்போது இந்த செல்கள் பைகளிலி ருந்து வெளிவந்து நுரையீரலுக்குள் செல் கின்றன. இவை பேக்டீரியாக்கள், வைரஸ்கள், புற்று நோய் செல்கள், அழியும் செல்கள் என அனைத்தையும் விழுங்கு கின்றன. உண்மையில் அந்நியமாகத் தோன்றும் அனைத்தும் அழிக்கின்றன. இத னால் வீக்கம் குறைந்து நோயின் தீவிரமும் தணிகிறது. ஃபுளூ காய்ச்சலில் இறந்த மற்றும் பிழைத்த எலிகளின் நுரையீரலில் காணப் பட்ட மரபணுக்களை ஆய்வு செய்து அவற்றின் மூலம் நுரையீரலில் தொற்று ஏற்படும்போது என்ன செல் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை பிக் டேட்டா (BIG DATA) எனப்படும் கணினி முறையில் கண்டுள்ளனர். அதன் பின் லேசர் அடிப்ப டையிலான முறையில் நுரையீரலுக்குள் மேக்ரோஃபேஜஸ் நுழைவதை கண்ட னர். அவற்றை நீக்கினால் நோய் அதிகமா வதும் நுரையீரல் வீக்கம் கூடுவதும் அறி யப்பட்டது. மேக்ரோஃபேஜஸை இயக்கும் புரதம் எது என்றுஅறியப்பட்டால் அதை அதிக ரிக்கும் அல்லது அதை தூண்டும் மருந்து களை தயாரிக்க இயலும். தொற்றுகளை தடுப்பூசி மூலம் குணப்படுத்தும்போது கிருமிகள் அதற்கு எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டுவிடு கின்றன. அமெரிக்காவில் மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தி கொண்ட 28 இலட்சம் தொற்று கள் ஏற்படுகின்றனவாம். அதில் 35000 நபர் கள் இறக்கின்றனராம். எனவே இயல்பாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டி கிருமிகளை அழிக்கும் முறை சிறந்தது ஆகும்.
குறும்புத்தனங்கள் எப்போது தோன்றின?
ஜெர்மனியிலுள்ள லீப்ஜி உயி ரியல் பூங்காவில் அஸிபோ எனும் சிம்பன்சி குட்டி தன் உறவினர் ஒருவரின் முதுகில் தட்டி விட்டு ஓடி ஒளிந்துகொள்கிறது. அந்தப் பெரிசு அதைக் கண்டுகொள்ள வில்லை. அந்தக் குட்டி மீண்டும் வந்து இன்னொரு அடி கொடுக்கிறது. இந்த முறை எரிச்சலடைந்த பெரிய குரங்கு கையை நீட்டி விரட்டுகிறது. இது போன்ற நிகழ்வுகளை ஆய்வு செய்து சிம்பன்சிகள் மனிதக் குழந்தைகள் போல் விளையாடுகின்றன என்று காட்டப்பட்டுள்ளது. மனிதக் குரங்கு வகைகளை சேர்ந்த நான்கு இனங்க ளும் இப்படி ஒன்றையொன்று சீண்டி விளையாடுவது ஆவணப்படுத்தப் பட்டுள்ளதால் ‘நகைச்சுவை தொடர் பான அறிவுணர்வு’ நமது பொது வான முன்னோர்களில் பல்லாயிரக்க ணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பரி ணாமம் அடைந்திருக்கலாம் என்கி றார்கள். கொடுப்பது போல நீட்டி பின் இழுத் துக் கொள்வது, சொல்வதற்கு நேர் மாறாக நடப்பது, பழிப்புக் காட்டுவது போன்ற அவை செய்யும் குறும்புகளை அட்டவணைப்படுத்தியுள்ளார்கள். மனிதக் குழந்தைகளில் இவை எட்டு மாதத்திலிருந்து விடலைப் பருவம் வரை சாதாரணமாகக் காணப்படு கின்றன. முரட்டுத்தனத்திற்கும் விளை யாட்டிற்கும் இடைப்பட்ட இந்த நடத்தை, மற்றவர்களின் எதிர்வினை யை எதிர்பார்ப்பது, அவர்களுடய எதிர் பார்ப்புக்கு நேர் எதிராகச் செய்வது போன்றவைகள் அடங்கியது. ஆனால் இந்த விளையாட்டுகள் அரி தாகவே வன்முறையில் முடிகின்றன என்கிறார் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் இசபெல் லாமெர். இன் னொரு ஆய்வாளர் இளம் சிம்பன்சிகள் பெரிய குரங்குகள் தூங்கும்போது அவற்றின் மீது ஏறி குதிப்பது, விளை யாட்டாக கடிப்பது அல்லது முடியை பிடித்து இழுப்பது ஆகியவற்றில் ஈடு படுவதைக் கவனித்துள்ளார். பெரிய குரங்குகள் இவற்றை அமைதி யாகவே எதிர்கொண்டன. சிரித்துக் களிப்பதை தாண்டி இந்த குறும்புகளில் என்ன நோக்கம் இருக்கி றது என்பது தெரியவில்லை. ஆனால் மனிதக் குழந்தைகள் இவற்றில் ஈடுபடு வது, சமூக வரையறைகளை சோதித் துப் பார்ப்பது, இருவருக்கும் மகிழ்ச்சி யை உண்டுபண்ணுவது அதன் மூலம் இருவருக்கும் இடையில் உள்ள உறவை பலப்படுத்துவது ஆகிய வற்றிற்கு உதவுகின்றன என்கிறார் லாமர்.