உலகக்கோப்பை கிரிக்கெட்டிற்கான மைதான ஒதுக்கீட்டில் அரசியல் தலையீடு?
விளையாட்டு உலகின் மிகப்பெரிய தொடரான 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் 13-வது சீசன் இந்தியாவில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அட்டவணை செவ்வாயன்று வெளி யிடப்பட்ட நிலையில், மைதான ஒதுக் கீட்டில் பல்வேறு சர்ச்சை வெடித் துள்ளது. நாட்டில் மொத்தம் 25 சர்வதேச மைதானங்கள் உள்ளன. இதில் 10 மைதானங்களில் மட்டுமே உலகக் கோப்பை ஆட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், முக்கிய ஸ்டார் அந்தஸ்து உள்ள மைதானங்களான மொஹாலி (பஞ்சாப்), ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்) மற்றும் இரண்டாம் தர சர்வதேச மைதானங்களான திரு வனந்தபுரம் (கேரளா), கவுகாத்தி (அசாம்), இந்தூர் (மத்தியப் பிரதேசம்), ராய்ப்பூர் (சத்தீஸ்கர்), ராஞ்சி (ஜார்க்கண்ட்) ஆகிய மைதானங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலி, ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்), திருவனந்தபுரம் (கேரளா) ஆகிய மைதான புறக்கணிப்பு விவகாரம் மிகப் பெரிய சர்ச்சை விவகாரமாக முளைத்துள்ளது. காரணம் சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி போன்று 3 மைதானங்களிலும் விமான நிலை யம், ஹோட்டல்கள் என பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் மிக அருகில் இருந்தும் மொஹாலி, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம் மைதானங்கள் ஏன் புறக்கணிக்கப்பட்டது? ஒருவேளை அர சியல் காரணங்களால் புறக்கணிக்கப் பட்டுள்ளதா? என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
குழப்பம்... சர்ச்சை...
உலகக்கோப்பை மைதான பட்டியலில் (ஐசிசி அட்டவணை) 12 மைதானங்கள் இருந்தன. மைதான பட்டியலில் திருவனந்தபுரம், கவுகாத்தி மைதானங்கள் இருந்தன. இதனால் திருவனந்தபுரம், கவுகாத்தி மைதானங்களில் உலகக்கோப்பை ஆட்டங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் போட்டி அட்டவணையில் திருவனந்தபுரம், கவுகாத்தி மைதானங்கள் இல்லை. திருவனந்தபுரம், கவுகாத்தி மைதானங்கள் பயிற்சி ஆட்டங்களுக்கானது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் அரசு கண்டனம்
மொஹாலி மைதானம் தேர்வு செய்யப்படாததற்கு பஞ்சாப் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் குர்மீத் சிங் மீட் ஹேயர் கூறியதாவது,”ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 நடத்தும் நகரங்களின் பட்டியலில் இருந்து மொஹாலியை நீக்கியதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். போட்டியை நடத்தும் நகரங்களின் பட்டியலில் இருந்து பஞ்சாபின் மொஹாலியை நீக்கியது அரசியல் தலையீடு காரணமாகும். பஞ்சாப் அரசு பிசிசிஐயிடம் இந்த பிரச்சனையை எழுப்பும்” என கூறியுள்ளார். பஞ்சாப் அரசு போன்று கேரளாவில் ஏன் உலகக்கோப்பை ஆட்டத்திற்கான மைதான ஒதுக்கீடு செய்யவில்லை? என மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீக்கப்பட்ட மைதானங்களும்... மாநில ஆட்சி நிலைமையும்...
உலகக்கோப்பை நடத்த அனுமதி வழங்காமல்
புறக்கணிக்கப்பட்ட மாநில மைதானங்
களும், அம்மாநிலத்தின் ஆட்சி நிலைமையை உற்று
நோக்கினாலும் அரசியல் தலையீடு சந்தேகம்வலுக்கிறது.
திருவனந்தபுரம் (கேரளா - இடதுசாரி ஆட்சி)
ஜெய்ப்பூர் (ராஜஸ்தான் - காங்கிரஸ் ஆட்சி)
மொஹாலி (பஞ்சாப் - ஆம் ஆத்மி ஆட்சி)
ராய்ப்பூர் (சத்தீஸ்கர் - காங்கிரஸ் ஆட்சி)
ராஞ்சி (ஜார்க்கண்ட்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி)
கவுகாத்தி (அசாம் - பாஜக ஆட்சி)
இந்தூர் (மத்தியப் பிரதேசம் - பாஜக ஆட்சி)
இதில் அசாம், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் பாஜக
ஆட்சி நடைபெற்றாலும், கவுகாத்தி (அசாம்) மைதானம்
மணிப்பூர் கலவர விவகாரம், மழை காரணங்களாலும், இந்தூர் (மத்தியப் பிரதேசம்) மைதானம் பிட்ச் பகுதி பாதிப்பாலும்
தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக ஆட்சியில் உள்ள மாநிலமும், மைதானங்களும்...
பாஜக ஆட்சியில் உள்ள மாநிலமும், மைதானங்களும்...
உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறைவு என்றாலும் பாஜக ஆளும் மாநிலங்கள்
என்பதால் உலகக்கோப்பை மைதான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அகமதாபாத் (குஜராத் - பாஜக ஆட்சி)
லக்னோ (உத்தரப்பிரதேசம்-பாஜக ஆட்சி)
மும்பை, புனே (மகாராஷ்டிரா- பாஜக கூட்டணி ஆட்சி)
மெட்ரோ என்பதால் தப்பித்த 6 நகரங்கள்...
சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, தில்லி, பெங்களூரு 5 நகரங்கள் மெட்ரோ அந்தஸ்து உள்ள நகரங்கள் என்பதாலும், தர்மசாலா சுற்றுலா மைதான அந்தஸ்து என்பதாலும் அங்கு அரசியல் தலையீடு செய்யமுடியவில்லை. இல்லையென்றால் அங்கும் அரசியல் ஆட்டம் நடனமாடியிருக்கும். மேற்குறிப்பிட்ட 6 நகர மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.