games

img

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் டி20 தொடர்: 75சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி  

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் டி20 தொடருக்கான பார்வையாளர்களின் திறனை 75 சதவீதமாக அதிகரிக்க மேற்கு வங்க அரசு அனுமதித்துள்ளது.  

கீரன் பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி டி20 சுற்றுப்பயணத்திற்காக கொல்கத்தாவுக்கு வருவதற்கு முன்பு பிப்ரவரி 6 ஆம் தேதிமுதல் அகமதாபாத்தில் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்தநிலையில் கொல்கத்தாவில் நடைபெறும் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான பார்வையாளர்களின் திறனை 75 சதவீதமாக அதிகரிக்க மேற்கு வங்க அரசு அனுமதித்துள்ளது. இது பிப்ரவரி 16 முதல் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. மேற்கு வங்க அரசின் சமீபத்திய உத்தரவின்படி, அனைத்து உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளும் மைதானத்தின் திறனில் 75 சதவீதம் அனுமதிக்கப்படும்.  

மேற்கு வங்க அரசின் உத்தரவின்படி, அனைத்து உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளும் அரங்கின் திறனில் 75 சதவீதத்துடன் அனுமதிக்கப்படும். அதாவது சுமார் 50,000 ரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.      

கடந்த நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் கொல்கத்தாவில் நடைபெற்றபோது 70சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.