games

img

ஐசிசி மகளிர் கனவு அணி இந்தியாவுக்கு இடம் இல்லை

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்ற பின்பு நன்றாக விளையாடிய வீரர் - வீராங்கனைகளை வைத்து “கனவு அணி” என்ற பெயரில் 12 பேர் கொண்ட அணியை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) அறிவிப்பது வழக்கம்.  சமீபத்தில் நிறைவு பெற்ற மகளிர் உலகக்கோப்பை தொடரில் (நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற) ஆஸ்திரேலிய அணி  வெற்றி பெற்று 7-வது முறையாக கோப்பை யை கைப்பற்றிய நிலையில், இந்த தொட ருக்கான கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் லீக் சுற்றில் வெளியேறிய இந்திய அணியிலிருந்து யாரும் இடம்பெற வில்லை.

வீராங்கனைகள் விபரம்: 

மெக் லானிங்(கேப்டன்) (ஆஸ்திரேலியா), லாரா வோல்வார்ட் (தென் ஆப்பிரிக்கா), அலிசா ஹீலி (ஆஸ்திரேலியா), ரேச்சல் ஹெய்ன்ஸ் (ஆஸ்திரேலியா), நாட் ஸ்கிவர் (இங்கிலாந்து), பெத் மூனி(ஆஸ்திரேலியா), ஹேலி மேத்யூஸ் (மே.இ.தீவுகள்), மரிசான் கேப் (தென் ஆப்பிரிக்கா), சோஃபி எக்லெஸ் டோன் (இங்கிலாந்து),   ஷப்னிம் இஸ்மாயில் (தென் ஆப்பிரிக்கா), சல்மா காதுன் (வங்கதேசம்), சார்லி டீன் (இங்கிலாந்து)

ஐபிஎல் 
இன்றைய
ஆட்டம் 

ராஜஸ்தான் - பெங்களூரு (13வது லீக்) 
இடம் ; பாட்டில் மைதானம், மும்பை
நேரம் : இரவு 7:30