games

img

சவுரங் கங்குலிக்கு “டெல்டா பிளஸ்” பாதிப்பு

பாதிப்பு மும்பை, ஜன,2- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பி.சி.சி.ஐ. தலைவருமான சவுரவ் கங்குலிக்கு (49) கடந்தாண்டு டிசம்பர் 28-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்ட கங்குலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில், சவுரவ் கங்குலி கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார். இதையடுத்து, அவர் மருத்துவமனையில் இருந்து சனிக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த  சவுரவ் கங்குலி-க்கு டெல்டா பிளஸ் பாதிப்பு என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.