games

img

இந்திய ரசிகர்களை ஈர்க்க சிறப்பு ஏற்பாடு செய்த ஃபிபா

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 22-வது சீசன் அரபு நாடான கத்தாரில் வரும் நவம்பர் மாதம் தொடங்குகிறது. இந்த தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்திய ரசிகர்களை ஈர்க்கும் வகையில், சர்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிபா) ஃபனாடிக் ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் தனி வழியை உருவாக்கியுள்ளது. இந்த தனி வழியில் இந்திய ரசிகர்கள் சிக்கலின்றி விரைவாக மைதான கேளரிக்குள் சென்று போட்டியை ரசிக்கலாம். இந்த ஃபனாடிக் ஸ்போர்ட்ஸ் திட்டத்தை இந்தியாவின் தேசிய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி ஃபிபா அதிகாரிகளுடன் தொடங்கி வைத்தார்.