games

img

இந்திய மகளிர் அணியின் புதிய துணை கேப்டனாக தீப்தி சர்மா நியமனம்  

இந்திய மகளிர் அணியின் புதிய துணை கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.  

இந்திய மகளிர் அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டி20, 5 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி வருகிறது. இந்த டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.    

முதல் ஒருநாள் போட்டியில் 62 ரன்கள், 3 விக்கெட் வித்தியாசத்தில் 2வது ஒருநாள் போட்டியிலும் நியூசிலாந்து அணி வென்றது. 3வது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி ஒருநாள் போட்டித் தொடரைக் கைப்பற்றியது.

அதனை தொடர்ந்து குயின்ஸ்டவுனில் இன்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டி மழை காரணமாக 20 ஓவர்களாக குறைக்கப்பட்டன. இதில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது.     17.5 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.    

இந்திய அணியின் ஒருநாள் கிரிக்கெட்டின் துணை கேப்டனான ஹர்மன்ப்ரீத் கவுர் இன்றைய ஆட்டத்தில் விளையாடாததால், 4 மற்றும் 5வது ஒருநாள் போட்டியின் இந்திய அணியின் புதிய துணை கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.