இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் போன்று கிரிக்கெட் விளையாடும் நாடுகள் டி-20 லீக் ஆட்டங் களை நடத்தி வருகின்றன. இந்த தொடர் போல மகளிருக்கும் டி-20 லீக் ஆட்டங்கள் நடத்த பல ஆண்டுகளாக இந்தியாவில் கோரிக்கை எழுந்து வந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மகளிர் பிக் பாஷ் டி-20 லீக் தொடங்கி பாராட்டுகளை பெற்றது. இந்தியாவிலும் அடுத்தாண்டு (2023) மகளிர் ஐபிஎல் தொடங்க வாய்ப்புள்ளது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறி யுள்ள நிலையில், பாகிஸ்தானில் மகளிர் பிஎஸ்எல் போட்டி நடைபெறும் என அந்நாட்டு மகளிர் கிரிக்கெட்டின் தலைமை அதிகாரி யான தானியா மாலிக் அறிவித்துள்ளார். இதற்கான அனுமதியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள் ளார்.