15-வது சீசன் ஐபிஎல் தொடர் பரபரப் பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது 30-வது லீக் ஆட்டத்தை தாண்டி யுள்ளன. ஒவ்வொரு போட்டியும் அரை யிறுதி, இறுதி ஆட்டம் போன்று சுவாரசியமாக நடைபெற்று வரும் நிலையில், ஐபிஎல் முகாமில் கொரோனா வைரஸ் நுழைந்துள் ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் தில்லி அணியின் பிசியோதெரபி நிபுணர் பேட்ரிக் ஃபார்ஹார்ட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தில்லி அணியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்ட றியப்பட்டுள்ளது. இதில் ஒருவர் வெளிநாட்டு வீரர் எனவும், மற்றொருவர் அணியில் பணியாற்றும் பணியாளர் என இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தில்லி அணி முகாமில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. தில்லி அணியின் மருத்துவ குழுவினர் பேட்ரிக் மற்றும் மற்ற 2 பேரை தனிமைப்படுத்தி அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பேட்ரிக் ஏற்கெனவே இந்திய அணியின் பிசியோ குழுவில் பணியாற்றிய அனுபவம் உடையவர்.
தில்லி அணியின் முகாமில் அனைவருக்கும் விரைவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், அணியின் பயிற்சி திட்டம் மற்றும் புனே பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் புதனன்று நடைபெறும் பஞ்சாப் - தில்லி அணிகள் மோதும் ஆட்டம் நடைபெறுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
பெங்களூரு அணிக்கும் சிக்கல்
கடைசியாக கடந்த சனியன்று பெங்களூரு அணியுடன் தில்லி அணி மோதிய நிலை யில், பெங்களூரு அணிக்கும் கொரோனா தொடர்பான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த அணியில் யாருக்காவது கொரோனா பாதிப்பு இருந்தால் ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடத்த சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஐபிஎல் தொடரை ரத்து செய்யக் கோரி டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் “Cancel IPL” ஹேஸ்டேக்
முகாமில் கொரோனா நுழைந்துள்ளதால் ஐபிஎல் தொடரை ரத்து செய்யக்கூறி டுவிட்டரில் Cancel IPL என்ற பெயரில் ஹேஸ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. குறுகிய காலத்தில் அதிக போஸ்ட் மற்றும் மீம்ஸ்கள் பதிவிடப்பட்டுள்ள தால் ஐபிஎல் நிர்வாகம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. ஹேஸ்டேக் பதிவில் முக்கியமாக ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராகவும் சில போஸ்ட்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.