games

img

விளையாட்டு செய்திகள்

இதுதான் ஒலிம்பிக் பரிசு; உலகளவில் வைரலாகும் எருமை

பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் ஆடவர்  ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் (27) அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை எரிந்து தங்கப்பதக்கம் வென்றார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அர்ஷத் நதீம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் உத வியாலும் (ஈட்டி - ஸ்பான்சர்), கட்டடத் தொழிலாளியான தனது தந்தை மற்றும் பொரு ளாதார ரீதியாகப் பின்தங்கிய  கானேவால் என்ற கிராம மக்களின் பண  உதவியால் பாரீஸ் ஒலிம்பிக் கில் பங்கேற்று தங்கப்பதக் கம் வென்றார். ஒலிம்பிக்கில் அர்ஷத் நதீம் தங்கம் வென்றதை கானேவால் கிராமம் மட்டுமின்றி, ஒட்டு மொத்த பாகிஸ்தான் நாடே கொண்டாடி வரும் நிலை யில், அவருக்கு வழங்கப் பட்ட ஒரே ஒரு பரிசு உலகள வில் டிரெண்ட் ஆகி வரு கிறது. 

எருமை

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தங்கள் நாட்டைச் சேர்ந்த வீரர் - வீரர்களுக்கு, உலக நாடுகள் கார், வீடு,  கோடிக் கணக்கில் பரிசுத் தொகையை வாரி வழங்கி வருகின்றன. ஆனால் கார், வீடு உள்ளிட்ட பரிசுத் தொகைகளை விட அர்ஷத் நதீமிற்கு அவரது மாமனார் வழங்கிய மிக எளிமையான பரிசு உலகளவில் இன்று அவரை டாப் டிரெண்டிங்கில் வைரலாகி வருகிறது. அர்ஷத் நதீம் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதற்கு பரி சாக அவரது மாமனார் எருமை மாட்டை பரிசாக வழங்கியுள்ளார்.

“எனது மருமகனுக்கு என் னால் முடிந்த அளவு வழங்கும் பரிசு இதுதான். ஆனால் எருமை மாட்டை பரிசளிப்பது என்பது ஒரு வருக்கு அதிக செல்வமும், மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டும் என்பதற்கான அடையாளம். எங்கள் கிரா மத்தில் இதுதான் நடை முறை. அதனால், எனது மரு மகனுக்கு எருமை மாட்டை பரிசளித்தேன்” என அர்ஷத் நதீமின் மாமனார் நவாஸ் கூறியுள்ளார். 

நவாஸின் மகள் ஆயி ஷாவை கடந்த 6 ஆண்டுக்கு முன் அர்ஷத் நதீம் திரு மணம் செய்து கொண்டார். பாகிஸ்தான் அரசு அர்ஷத் நதீமிற்கு ரூ.10 கோடி பரிசு வழங்கி அவரைக் கவுரவித் தாலும், எருமை மாடு தான் மிகப்பெரிய பரிசு என பாகிஸ்தான்  நாட்டினர் மீம்ஸ் செய்து கொண்டாடி வருகின்றனர்.

சமையல் எரிவாயு, சாலை, பல்கலைக் கழகங்கள் வேண்டும்

அர்ஷத் நதீம் தனது சொந்த ஊரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப் பில், “எனது கிராமத்திற்குச் சாலை வசதிகள் அமைத் துக் கொடுக்க வேண்டும். சமையல் எரிவாயுவை அர சாங்கம் வழங்கினால், அது எனக்கும் எனது கிராமத்திற் கும் மிகவும் உதவியாக இருக்கும். அதேபோல எங்கள் நகரத்தில் ஒரு பல் கலைக்கழகத்தை அமை த்துத் தர வேண்டும். அத னால் எங்கள் சகோதரிகள் அதிக தூரம் சென்று படிக்க வேண்டிய அவசியம் இருக் காது” என்று கூறியிருக்கிறார்.

வெறிச்சோடிய பாரீஸ்...

ஒலிம்பிக் தொடர் நடைபெற்றதால் கடந்த 2 வார காலமாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் விழாக்கோலம் பூண்ட நிலையில், ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்ற பின் ஊரடங்கு விதித்த பகுதி போன்று வெறிச்சோடியது.

ஊக்கமருந்து சோதனையில் தோல்வி
இந்திய பாரா பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத் இடைநீக்கம்

வரும் ஆகஸ்ட் 28 அன்று முதல் செப்டம் பர் 8 வரை பாரா ஒலிம்பிக் (மாற்றுத்திற னாளிகளுக்கான) தொடர் பிரானஸ் தலைநகர் பிரான்ஸில் தொடங்குகிறது. இந்த தொடர் தொடங்க இன்னும் 2 வார காலமே உள்ள நிலையில், இந்திய பேட்மிண்டன் வீரர்  பிரமோத் பகத் ஊக்கமருந்து கட்டுப்பாட்டு விதிகளை மீறிய காரணத்துக்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. பாரா ஒலிம்பிக்கின் முன்னாள் சாம்பி யனான பிரமோத் பகத்தின் இடைநீக்கம் அடுத்த ஆண்டு (2025) செப்டம்பர் 1 வரை சுமார் 18 மாத காலம் நிலுவை யில் இருக்கும். இந்த தடை உத்தரவு காரணமாக பாரீஸ் பாரா ஒலிம்பிக்கில் பிரமோத் பகத் பங்கேற்க முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளார்.