facebook-round

img

உணர்வுகளில் அரசியல் உணர்வே பாரதூரமானது

கோவை பன்னிமடையில் பாலியல் பலாத்காரம்செய்து கொல்லப்பட்ட 7 வயது குழந்தையை மறந்திருக்கமாட்டோம்.

ஜனநாயகமாதர் சங்கத்தினர் வன்முறையற்ற தமிழகம் படைப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து ஒரு நடைபயணத்தை தொடங்கியிருக்கிறார்கள்..

மாவட்டம்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் இணைந்து நடக்கிறார்கள்

அதில் கோவை பன்னிமடையில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 7 வயது குழந்தை ரிதன்யாஸ்ரீயின் தாய், வனிதாவும் நடப்பதைப்பார்த்தேன்..

கொலையின்போது நாம் பலவகையில் உணர்சி வசப்பட்டோம் ..எழுதித்தீர்த்தோம் போராட்டங்களில் கலந்து கொண்டோம். ஆனால் அவை எல்லாவற்றையும்விட அவரை அரசியல்படுத்தியது முக்கியமானது

உணர்வுகளில் அரசியல் உணர்வே பாரதூரமானது.

-Lakshmanasamy Odiyen Rangasamy