நீங்கள் என்னுடைய கனவுகளையும் குழந்தைப்பருவதையும் திருடிவிட்டீர்கள், உங்களுக்கு என்ன தைரியம் இருக்கும் இவ்வாறு செய்வதற்கு என்று உலக அரங்கில் கூக்குரலிட்ட கிரேட்டா துன்பெர்கின் குரல் மானுடத்தை காப்பாற்ற எழுப்பப்படும் நம்பிக்கை குரல். தனியொருத்தியாக அவள் ஆரம்பித்த இந்த போராட்டம் இன்று உலகத்தை அவளுடன் நிற்கவைத்துள்ளது. மானுடத்தின் இருத்தியலை கேள்விக்குட்படுத்தும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள "தனிப்பெரும்" குறியீடாக மாறியுள்ளாள் அவள்.