இந்த கஸ்தூரி ரங்கனாரின் கல்விக் கொள்Kஐ அறிக்கை குறித்த CPM கட்சியின் அதிகாரபூர்வமான விமர்சனத்தின் தமிழாக்கத்தை நேற்று இங்கே பதிவிட்டிருந்தேன். இன்று அவர்களின் கட்சி வெப் பக்கத்தில் அதன் ஆங்கில மூலத்தைத் தரவிறக்கி முழுமையாகப் படித்தேன். இதுவரையில் வந்த மதிப்பீடுகளிலேயே மிகச் சிறந்த மதிப்பீடு அதுதான். ஓரளவு எல்லாவற்றையும் படித்துக் கொண்டிருப்பவன் என்கிற முறையில் என் கருத்து இது.
நல்ல அறிவுஜீவி வட்டம் ஒன்று அவர்களிடம் உண்டு. அவற்றின் உதவியோடு மிகச் சிறப்பாக அதைத் தயாரித்துள்ளனர். எனவே மிகவும் scholarly ஆக அந்த விமர்சனம் அமைந்துள்ளது. கல்வித் துறையினர் பலரும்கூட விமர்சித்துள்ளனர். ஆனால் ‘அகாடமிக். ஆகச் செய்யும் ஆய்வைக் காட்டிலும் மக்களை உடனடியாகப் பாதிக்கும் பிரச்சினைகளில் இதுபோன்ற களத்தில் பணியாற்றும் வேலைகளைச் செய்பவர்களின் கருத்துக்கள்தான் ஆழமாக மட்டுமின்றியும் அனுபவபூர்வமாகவும் அமையும். அந்த வகையில் சிறப்பாக அமைந்துள்ள இவர்களின் விமர்சனத்தை வாசியுங்கள். சும்மா ஏதோ எதிர்க்கட்சி என்பதால் வெறுப்போடு புறந்தள்ளாமலும், ரொம்பவும் நடைமுறைச் சாத்தியங்களைக் கணக்கில் கொள்ளாமல் தத்துவம் பேசிக் கொண்டிராமலும் இவர்களின் 'அஜென்டா' எவ்வாறு இங்கே முன்வைக்கப்பட்டுள்ளது என்பதையும் அதன் ஆபத்தையும் சுட்டிக்காட்டி எழுதப்பட்டுள்ள எழுதப்பட்டுள்ள ஒரு முக்கியமான விமர்சனம் இது.
'ஆர்.எஸ்.எஸ்' அஜெண்டா என்றால் ஏதோ கல்வி அமைப்பில் காவியைப் புகுத்துவது மட்டுமல்ல. அதிகாரங்களை ஒரு புள்ளியில் குவித்தல் (centralisation), முற்றிலும் உலக முதலாளிய வர்த்தகக் கொள்கைகளுக்கு அடிமையாதல் (corporatisation) என்பதும் அத்துடன் பிரிக்க முடியாத ஒன்றுதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.