கொடுத்ததெல்லாம் கொடுத்தார்.... யாருக்காகக் கொடுத்தார்?
லட்சக் கணக்கானோர் வேலைகளை இழந்து செய்வதறியாது நிற்கும் இந்த வேளையில், நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கார்ப்பரேட் கம்பெனிகளின் வரியை அதிரடியாகக் குறைத்து ‘துயருற்றிருக்கும்’ முதலாளிகளுக்கு நிவாரணம் வழங்கியிருக்கிறார். இன்று அவர் வெட்டியிருக்கும் வரிகளின் மதிப்பு ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடிகள். ஏற்கெனவே ஏற்றுமதியாளர்களுக்கு சலுகையாக சுமார் 50 கோடிகளை வெட்டியிருக்கிறார். இரண்டையும் கூட்டினால் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய், இது இந்தியாவின் மொத்தப் பொருளுற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் ஒரு சதவீதமாகும்.
முதலீட்டாளர்களின் நம்பிக்கையை (investor confidence) வளர்ப்பதினால் மட்டுமே வளர்ச்சி வரும் என்பது அரசுகளின் கொள்கை. மக்களின் நம்பிக்கையை வளர்க்காமல் எதுவும் வளராது என்பது எதார்த்தம்.
சப் கா சாத், சப் கா விகாஸ் (அனைவருடனும் ஒன்றாக இருப்போம், அனைவருக்கும் வளர்ச்சி கொடுப்போம்). இது மோடியின் கோஷம்!
அனைவர் என்பது இங்கு யார் என்று நன்றாகவே புரிகிறது!