facebook-round

img

தமிழக கிராமங்களில் சங் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாகத்தான் தகவல்

எச்சரிக்கை
உண்மையில் பல தமிழக கிராமங்களில் சங் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாகத்தான் தகவல்கள் வருகின்றன. கோவில் திருவிழா நடத்துவது என்கிற பெயரில் இளைஞர்களையும் பெண்களையும் காவி வலைக்குள் கொண்டுவந்து விட்டனர். நகரங்களிலும் இலவச ட்யூஷன், விளையாட்டுப் பயிற்சி முகாம்கள், வாரம் ஒரு முறை தேசியக் கொடியேற்றி தேசீய கீதம் பாடுவது என்று பல வகைகளில் மக்களைத் திரட்டி வருகிறார்கள். குழந்தைகளுக்கு ‘படிப்பும் கட்டுப்பாடும்’ சொல்லிக் கொடுப்பது நல்லதுதானே என்று பெற்றோரும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கின்றனர்.
அரசியல் கட்சிகளும், வெகுஜன இயக்கங்களும் இப்போது ஸ்தல அளவில் தலையிட வில்லையெனில் பின் எப்போதுமே முடியாது.
மக்களை ஒன்றுபடுத்தும் விழாக்கள் போன்ற நிகழ்வுகளை நடத்துவது உடனடித் தேவை.
தேர்தல் விளம்பரத்துக்கு முன் கூட்டியே சுவர்களைப் பிடிப்பதை விட மக்களின் சிந்தனையில் பிரிவினைக் கருத்துகள் இடம் பிடிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். தேர்தலுக்காக அமைக்கப் பட்ட கூட்டணிகள் கிராம அளவில் இந்தப் பணிக்கு முன்னுரிமை கொடுத்துச் செயல்பட வில்லையெனில் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது. எதிர்காலத்தில் வெல்லவும் முடியாது. பதட்ட சூழல் உருவாகும் என்று தெரிந்தால் உடனே ஸ்தல அளவில் அமைதிக் குழுக்களை அமைக்க அரசியல் சக்திகள் இணைந்து செயல்பட வேண்டும்.

-Vijayasankar Ramachandran