election2021

img

அதிமுகவை ‘மீட்பார்களோ?’

தொகுதி பேரம் படியாததால் அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிக, அதிமுகவை மீட்டெடுக்க போராடுவதாகச் சொல்லும் அமமுகவுடன் புதனன்று பேச்சுவார்த்தை நடத்தியது.தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 அன்று நடைபெறுகிறது. தேர்தல்  பணிகளில் அனைத்துக்கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என அனைத்திலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

 குறைந்த தொகுதிகளை ஒதுக்கியதை ஏற்க மறுத்து அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து செவ்வாய்க்கிழமையன்று தே.மு.தி.க. விலகியது. மேலும் தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.இந்நிலையில் அமமுகவுடன் தேமுதிக கூட்டணி குறித்து மார்ச் 10 அன்று சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள ஓட்டலில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அமமுக சார்பில் பழனியப்பன், மாணிக்கராஜா பங்கேற்றனர். தேமுதிக சார்பில் பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;