கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி குறிஞ்சிப்பாடிதொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். அவர் திடீரென மாற்றப்பட் டார். அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் தொகுதி மாற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் கடலூரில் கூத்தப் பாக்கத்தில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் ஒன்று கூடினர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமைச்சர் எம்.சி. சம்பத்தின் பிரச்சார வாகனத்தைஅடித்து உடைத்து சேதப்படுத்தினர்.பின்னர், அமைச்சர் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த அவரது இருக்கை, மேசை மற் றும் நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தினர். அங்கிருந்த அமைச்சரின் மகன் எஸ்.பிரவீன் உயிர் தப்பினார். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.