election2021

img

தமிழகத்தில் ஆட்சிமாற்றத்திற்கு வழிவகுத்த தமிழக வாக்காளர்களுக்கு சிபிஎம் நன்றி.....

சென்னை:
தமிழகத்தில் ஆட்சிமாற்றத்திற்கு வழிவகுத்த தமிழக வாக்காளர் களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்றிகளை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 

நடந்து முடிந்த 17-வது சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண் ணிக்கை மே 2 அன்று நடைபெற்று பெருமளவுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின் றன. மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான மதச்சார் பற்ற அணிக்கு மக்கள் மாபெரும் வெற்றியை அளித்திருக்கிறார்கள். இதன்மூலம் தமிழகத்தில் மத்திய பாஜகவின் எடுபிடி அரசாகவும் ஊழல் மலிந்த அரசாகவும் இருந்த அதிமுக ஆட்சி அகற்றப்பட்டதோடு, வகுப்புவாத சக்திகளின் ஆதரவோடுபோட்டியிட்ட அதிமுக அணி தோற்கடிக்கப்பட்டு ஒரு புதிய ஆட்சியைமலரச் செய்ய மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் புதிய ஆட்சி அமைய உள்ளது. 

திமுக தலைமையிலான சிபிஐ(எம்), காங்கிரஸ், சிபிஐ, விசிக,மதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகளின் வேட்பாளர்களையும் மக்கள் வெற்றி பெறச்செய்துள்ளனர். இந்த ஆட்சி மாற்றத்தை அளித்ததமிழக வாக்காளர்களுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.தேர்தல் அறிவித்த நாளிலிருந்து இந்த அணியின் வெற்றிக்கு பாடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், ஊழியர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது. கோவிட் பெருந்தொற்று சூழலையும், கடுமையான பொருளாதார நெருக்கடியையும், வாழ்வாதாரப் பிரச்சனைகளையும் மக்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மலரப்போகிற புதிய ஆட்சி இந்தச் சவால்களை மக்கள் ஆதரவோடு நிறைவேற்றுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

;