election2021

img

கே. பாலகிருஷ்ணன் பேட்டி... 1ஆம் பக்கத் தொடர்ச்சி...

ஆளும் கட்சியினர் தேர்தல் விதிமுறைகள்,கட்டுப்பாடுகளை மதிக்காமல் செயல்படுவார்கள். அவர்கள் மீது வழக்கும் பதியமாட்டார்கள். எதிர்க் கட்சி வேட்பாளர்கள் சிறு தவறு, விதிமீறல் செய்தாலும் வழக்குபோடுவார்கள். விதிமுறைகளை மீறித்தான் செயல்படுவோம் என்பதாக அவர்களது தொடக்கம் அமைந்துள்ளது என்றார்.திமுக தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற முடியாது என்று முதலமைச்சர் கூறுகிறார். அப்படியானால், மாதம் 1500 ரூபாய்பணம், 6 சிலிண்டர் என்ற அதிமுக அறிவிப்பை எப்படி நிறைவேற்றுவார்கள். கஜானாவை காலி செய்துவிட்டோம், திமுக எப்படி திட்டங்களை நிறைவேற்றும் என்று ஒரு வேளை நினைத்து முதலமைச்சர் கூறியிருப்பார். தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ள திமுக அதற்கான திட்டமிடலோடுதான் அதை செய்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் மத்திய அரசு செயல்படுகிறது. அதற்கு தமிழக மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்று குறிப்பிட்ட பாலகிருஷ்ணன், அதிமுக- பாஜக அணி அனைத்து விதமானமுறைகேடுகளிலும் ஈடுபட வாய்ப்புள்ளது. அதனை திமுக கூட்டணிக்கட்சிகள் முறியடிக்கும் என்றார்.கோவில்கள் வெறும் வழிபாட்டுத்தலங்கள் மட்டுமல்ல. பண்பாடு, கலாச்சாரம், கலை பொக்கிஷம். எந்த அடிப்படையில் தனிநபர்களிடம் கொடுப்பது. இப்படி கூறுவது பொருத்தமற்றது. கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் அவை பாதுகாப்பாக உள்ளன. இறைநம்பிக்கை உள்ள பக்தர்களின் உணர்வுகளை மதிக்கிறோம். சிறுபான்மை மக்களின் வழிபாட்டு தலங்களுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், அவற்றை பாதுகாப்போம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றும் பாலகிருஷ்ணன் கூறினார்.இந்த செய்தியாளர் சந்திப்பின் போதுஅரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன், பி.சம்பத் மற்றும் வேட்பாளர்கள் உடனிருந்தனர்.

;