election2021

img

‘கிரம்மர்’ சுரேஷ் அங்கலாய்ப்பு....

மதுரை மத்தியத் தொகுதியில் அதிமுக சார்பில் அதன் தோழமை கட்சியான பசும்பொன் தேசியக் கழகத்திற்கு ஒதுக்கீடு செய்து அதன் வேட்பாளராக ஜோதி முத்துராமலிங்கம் என்பவர் போட்டியிடுகிறார். இந்நிலையில் அதிமுகவின் மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி நிர்வாகியான கிரம்மர் சுரேஷ் அதிமுகவில் விருப்ப மனு செலுத்திய நிலையில், அதிமுகவிற்குத் தொகுதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

“15ஆண்டுகாலம் அதிமுகவில் உழைத்த நான் தனித்துவிடப்பட்டதால் சுயேச்சையாகப் போட்டியிடுகிறேன், டிடிவி தினகரனால் அதிமுகவில் இணைந்தேன். அம்மாவின் கையால் அதிமுக உறுப்பினர் அட்டை பெற்றேன், வாய்ப்பைச் சரியான நபர்களுக்கு வழங்குவதுதான் நல்ல தலைமை. அம்மா வளர்த்தெடுத்த அதிமுகவில் எத்தனையோ தொண்டர்கள் உள்ள நிலையில் அதிமுக தொண்டரை வேட்பாளராக அறிவிக்க முடியாத காரணம் என்ன?

அதிமுகவின் தலைமையின் செயலை உணர்த்தும் வகையில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறேன், எனவும் அம்மாவின் தொண்டர்களின் மனசாட்சியாக நிற்கிறேன். நான் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தும் அதிமுக தலைமை என்னை அழைத்துப் பேசவில்லை, மத்தியத் தொகுதி வேட்பாளரை அறிவித்தது யார் எனவும், ஒருங்கிணைப்பாளர்கள் சேர்ந்து முடிவு எடுக்கிறார்களா? ஆளுக்கு ஒரு முடிவு எடுக்கிறார்களா என்ற சந்தேகம் உள்ளது, கையில் கட்சிக்கொடியைப் பிடிக்காத நபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது உயிரைத் துச்சமெனக் கருதிக் கழகப் பணி ஆற்றினேன்; இப்போது அதிமுகவில் இருந்து வெளியேறிவிட்டேன்” என அவர் கூறியிருக்கிறார்.

;