election2021

img

தேர்தல் பணி  முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம்....

சென்னை:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வருகிற 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை 4 நாட்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம். தமிழக டி.ஜி.பி. அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சட்டப்பேரவைத் தேர்தலில் வருகிற 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை 4 நாட்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பம் உள்ள முன்னாள் காவலர்கள், ராணுவத்தினர், துணை ராணுவத்தினர், சிறைக்காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். இந்த பணியில் ஈடுபடும் 4 நாட்களுக்கும் ஊதியம், போக்குவரத்து, உணவுப்படிகளும் வழங்கப்படும். இதுதொடர்பாக 044- 28449201 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;