districts

தமிழ்ப் பல்கலை.யில் முனைவர் பட்ட  சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர், ஜூலை 7-  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, நுழைவுத் தேர்வு  (TURCET 2020) தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்க லாம் என்று பதிவாளர் (பொ) முனைவர் சி.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முனை வர் பட்டச் சேர்க்கைக்கு 2022 ஜூலை பருவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். அதன்பிறகு செல்லாது.  மேலும் நெட், செட், யுஜிசி, ஜேஆர்எப், கேட் தேர்ச்சி  பெற்றவர்களும் மற்றும் வெளிநாட்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். ஜூலை 2022 பருவத்திற்கு பிறகு முனைவர் பட்டச்  சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புதிதாக நடத்தப்பெறும் நுழைவுத்  தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். 

;