election2021

img

அசாமில் ‘மாபியா’ கும்பல் போல  பாஜக அரசு செயல்படுகிறது.... பிரியங்கா காந்தி கடும் விளாசல்...

கவுகாத்தி:
அசாம் மாநிலத்தில், ஆளும் பாஜக அரசு ஒரு ‘மாபியா’ கும்பலைபோன்று செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.அசாம் மாநிலம், கோலாஹாட் மாவட்டத்தில் திங்களன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், பிரியங்கா காந்தி கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். 

அப்போது, “அசாம் ஆட்சிக்கட்டிலில் பாஜக அமர்ந்ததுமுதலாக மாநிலத்தில் அராஜகங்களும், அடக்குமுறைகளும் அதிகரித்துள்ளன. தாங்கள் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் அசாம் மக்களை பாஜகஅரசு ஏமாற்றிவிட்டது. மகாபாரதத்தில் வரும் சகுனியைப்போல கட்சித் தலைமையின் செயல்பாடுகள் இருக்கின்றன”என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.“மக்கள் நலன் குறித்து பாஜக அரசுக்கு சிறிதும் அக்கறைகிடையாது. மாறாக, மக்களின் பணத்தை தங்கள் சுயநலனுக்காக ஆளுங்கட்சியினர் பயன்படுத்தி வருகின்றனர். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஒரு மாபியா கும்பலை போன்று அசாமில் பாஜக செயல்பட்டு வருகிறது” என்றும் சாடியுள்ளார்.

;