election-2019

img

சிவகார்த்திகேயன் வாக்கு கணக்கில் எடுக்கப்படும் : சத்யபிரதா சாஹூ

விதியை மீறி சிவகார்த்தியன் வாக்களித்தாலும் அவரது வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த 18ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களிக்கும் போது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என பிரச்சனை ஆனது. ஆனால் அதன்பின் வாக்களித்துவிட்டேன் என தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்தார்.

ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் எப்படி வாக்களித்தார் என கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்தார்.

இந்நிலையில் விதியை மீறி சிவகார்த்தியன் வாக்களித்தாலும் அவரது வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்


;