election-2019

img

முன்னாள் மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமார் பீகாரின் பெகுசராய் தொகுதியில் வேட்புமனு தாக்கல்

நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பீகார் மாநிலம் பெகுசராய் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவரான கண்ணையா குமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.


ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவரான கண்ணையா குமார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பீகார் மாநிலம் பெகுசராய் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இன்று வேட்புமனு தாக்கல் செய்ய நடந்த பேரணியில் கண்ணையா குமாருடன் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பலர் மிதிவண்டிகளிலும், மோட்டார் சைக்கிள்களிலும் அணி வகுத்துச் சென்றனர். அவர் தனது எதிர் போட்டியாளராக பா.ஜ.கவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங்கை எதிர்கொள்ள உள்ளார்.


கண்ணையா குமார் கடந்த 2016ல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சங்க தலைவராக இருந்தபோது பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நாட்டிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதாக வேண்டுமென்றே அவர் மீது வழக்குப்பதிவு செய்து மத்திய பா.ஜ.க அரசு வன்மத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


;