election-2019

img

புதுச்சேரியில் பெண்களே நிர்வகித்த 7 வாக்குச்சாவடிகள்

புதுச்சேரியில் 7 வாக்குச்சாவடிகளில் பெண்களே முழுக்க நிர்வகித்து வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

புதுச்சேரியில் 7 வாக்குச்சாவடிகள் பெண் அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டது. வாக்காளர் மையத்துக்கு வெளியே பெண்களே நிர்வகிக்கும் வாக்குச்சாவடி என்று பேனர் கட்டப்பட்டிருந்தது. 

புதுச்சேரி சுல்தான்பேட்டையில் உள்ள காயிதே மில்லத் அரசு மேனிலைப்பள்ளி, லாஸ்பேட்டையில் உள்ள குளூனி, முத்தியால்பேட்டையில் உள்ள வாசவி பள்ளி, லாஸ்பேட்டை டி.ஐ.இ.டி. நயினார் மண்டபம், அன்னை தெரசா மேனிலைப்பள்ளி, சத்தியா நகர் ஆதித்ய வித்யாசரம், காரைக்கால் அவ்வையார் பெண்கள் கல்லூரி மையங்கள் ஆகிய வாக்குச்சாவடிகளில் பெண்களே முழுக்க நிர்வகித்து வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதைக் கேள்விப்பட்ட வாக்காளர்கள் வியப்புடன் வாக்களித்தனர்.


;