election-2019

img

பீகார்: தனியார் ஹோட்டலில் இருந்து 6 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீட்பு

பீகாரில் தனியால்ஹோட்டலில் 6 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகாரில் முசாஃபர்பூர் உள்ளிட்ட 5 மக்களவை தொகுதிகளுக்கு திங்களன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது முசாஃபர்பூரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் 6 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் கருவிகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரி அவ்தேஷ் குமார் என்பவர் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹோட்டலுக்கு கொண்டு சென்றுள்ளார். என்று பூத் ஏஜெண்டுகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்த மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான அலோக் ரஞ்சன் கோஷ், பழுதாகும் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற, ஒவ்வொரு தேர்தல் அதிகாரிகளிடமும் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொடுக்கப்பட்டதாகவும், அவற்றை மாற்றிய பிறகு அந்த இயந்திரங்களை தேர்தல் அதிகாரி தமது காரில் எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்தார். 

இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் அதிகாரி அவ்தேஷ் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.அவ்தேஷ் குமாரின் கார் ஓட்டுனர் வாக்களிக்க பக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு செல்வதால் வாக்கு இயந்திரங்களுடன் அவ்தேஷினை அருகில் உள்ள ஹோட்டலில் இறக்கிவிட்டுள்ளார். வாக்கு இயந்திரங்களை ஹோட்டலுக்கு எடுத்துச் சென்ற விவகாரம் பூத் ஏஜெண்ட்கள் சிலருக்கு தெரியவந்ததையடுத்து அவர்கள் அங்கு சென்று இது குறித்துகேள்வி எழுப்பினர். இதையடுத்து இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து தேர்தல் அதிகாரி வாக்கு இயந்திரங்களை விதிமுறைப்படி ஹோட்டலுக்கு எடுத்துச் சென்றிருக்கக் கூடாது என்பதால் இது குறித்து அலுவல் ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஆட்சியர் அலோக் ரஞ்சன் கோஷ் தெரிவித்தார்.