education

img

காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில் வேலை

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கியில் 156 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1.பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்

சம்பள விகிதம்: ரூ.10,500 - ரூ.31,650.

2. பணியின் பெயர்: ஓட்டுநர்.

சம்பள விகிதம்: ரூ.11,250 - ரூ.33,075.

கல்வித்தகுதி : அலுவலக உதவியாளர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக/கனரக ஓட்டுநர் உரிமத்துடன் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க 
வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்
ரூ.150. கட்டணத்தை காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி DD-யாக செலுத்த வேண்டும். மேலும், அருந்ததியர் மற்றும் விதவைப் பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை
மேற்கண்ட பணிகளுக்கான விண்ணப்பப் படிவம் காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, மற்றும் அதன் கிளை அலுவலகங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னர், அதை பூர்த்தி செய்து தேவையான சான்றுகளின் நகல்களுடன் 7.2.2020-ஆம் தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம், காஞ்சிபுரம் - 631 501.கூடுதல் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 044-27238231.

;