education

img

தனியார் பள்ளிகளிலிருந்து ஒரு லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு வந்தனர்

சென்னை, ஜூலை 27- தமிழகத்தில் இந்த ஆண்டில் தனியார் பள்ளிகளிலிருந்து சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளி களுக்கு வந்துள்ளனர்.  அரசுப் பள்ளிகளில் போதிய வசதிகள் இல்லை என்றும் கல்வித் தரம் இல்லை என்றும் கூறி பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைத் தனியார் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். அரசு அதிகாரிகள் கூட தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கத் தயங்குகின்றனர். இந்நிலையில் 2019-20 ஆம் ஆண்டில் மட்டும் 2 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு ஒரு லட்சம் மாண வர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு இடம் மாறியுள்ள னர். தனியார் பள்ளிகளில் வசூலிக்கப் படும் அளவுக்கு அதிகமான கட்டணங் களால்தான் இவ்வாறு மாணவர்கள் இடம் மாறுவதாகத் தலைமை ஆசிரியர்களும் கல்வித் துறை நிபுணர்களும் கூறுகின்றனர். 2018-19ஆம் ஆண்டில் மொத்தம் 3.93 லட்சம் பேர் ஒன்றாம் வகுப்பு  படித்த நிலையில் இந்த ஆண்டில்  இரண்டாம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை 4.16 லட்சமாக உயர்ந்துள்ளது. தனியார் பள்ளிக ளிலிருந்து 23,032 பேர் இரண்டாம் வகுப்பில் இணைந்துள்ளனர். மூன்றாம்  வகுப்பில் 30,744 மாணவர்களும், நான்காம்  வகுப்பில் 27,868 மாணவர்களும், ஐந்தாம் வகுப்பில் 23,859 மாணவர்களும் புதிதாக இணைந்துள்ளனர். இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் ஒரு லட்சம் வரையில் உயர்ந்துள்ளதாகக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

;