நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகளும் புதன்கிழமை அதிகரிக்கப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலையை எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. 5 மாநில தேர்தல் காரணமாக சுமார் 3 மாதங்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று விலை உயர்த்தப்பட்டதைத் தொடா்ந்து, இதைத்தொடர்ந்து சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.106.69-ஆகவும், ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.96.76-ஆக உயா்ந்துள்ளது.
சென்னையில் கடந்த 9 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.29 வரையிலும், டீசல் விலை ரூ.5.33 வரையிலும் உயர்ந்துள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விலை உயர்வின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.