districts

img

நூறுநாள் வேலை வழங்க வேண்டும் விதொச செங்கல்பட்டு மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

திருப்போரூர், டிச. 16- அனைத்து பேரூராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ்  வேலை வழங்க வேண்டும் என விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் 10 வது மாவட்ட மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் வெள்ளியன்று (டிச16)  மாவட்ட துணைத் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. திருப்போரூர் வட்ட நிர்வாகி பொன்னப்பன் வரவேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து சிஐடியு மாவட்டச் செயலா ளர் க.பகத்சிங்தாஸ் பேசினார். மாவட்ட செயலாளர் பி.சண்முகம் வேலை அறிக்கை  சமர்பித்தார். மாநாட்டை வாழ்த்தி தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.அரிகிருஷ்ணன், மாதர் சங்கத்தின்  மதுராந்தகம் வட்டத் தலைவர் வனிதாமணி ஆகியோர் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் அ.து.கோதண்டன் பேசினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் அனை வருக்கும் 150 நாள் வேலை, தினக்கூலி ரூபாய்  600 என உயர்த்தி வழங்க வேண்டும், 60 வயது  நிறைவடைந்த விவசாயத் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்,  வீடு இல்லாத விவசாயத் தொழி லாளர் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை  வழங்கி , வீடு கட்ட நிதி வசதி செய்து தர  வேண்டும், உபரி நிலங்கள், பஞ்சமி நிலங்களை எடுத்து கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்ய  வேண்டும்,  பேரூராட்சி மற்றும் நகராட்சிக ளுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தை விரிவு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,  நீண்ட காலமாக அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு மின் இணைப்பு,  குடிமனை பட்டா வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.சங்கத்தின் தலைவராக பி.சண்முகம், செயலாளராக க.புருஷோத் தமன், பொருளாளராக வி.சசிகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.