செங்கல்பட்டு,ஜூன் 13- தமிழ்நாடு அரசு அமல்படுத்தி வரும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள அரசாணையின் படி சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறு வனமும், அந்நிறுவனத்திடம் மூன்றாம் நபர் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள எம்.டி இந்தியா மற்றும் மெடி அசிஸ்டன்ட் ஆகிய காப்பீட்டு நிறுவனங்களும் தமிழ்நாடு அரசின் அரசாணையை மதிப்பதில்லை. மேலும் சிகிச்சை பெறும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சிகிச்சை கட்ட ணத்தில் 20ரூ முதல் 40ரூ வரை மட்டுமே அனுமதித்து மிகப்பெரிய மோசடியில் ஈடு பட்டுள்ளன. இம்முறைகேடு மீது தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு அரசாணைப் படி கட்டணமில்லா சிகிச்சை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும், காப்பீட்டு நிறு வனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் முறைகேடுகள் தொடர்பாக உரிய விசா ரணை மேற்கொண்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் இணைய முறையில் தாமாகவே மாதந்தோறும் வருமான வரிப்பிடித்தம் செய்யும் முறையைக் கைவிட்டு, பழைய முறைப்படி ஆசிரியர்களின் விருப்பப்படி வருமான வரி செலுத்திட தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் வளாகத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அண்ணா மகா லட்சுமி தலைமையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கோரிக்கைகளை விளக்கி மாநில பொரு ளாளர் ஜீ. மத்தேயு, மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. வரதன், மாவட்ட செயலாளர் மு. சீனுவாசன் மாவட்ட துணை செயலாளர் ஏ. தேவேந்திரன் மாவட்ட பொருளாளர், இரா. குணசேகரன் உள்ளிட்ட பலர் பேசினார்.