districts

img

ஏரியில் கழிவு நீர் கலப்பு! செத்து மிதக்கும் மீன்கள்

செங்கல்பட்டு, ஜூலை 18-  கீழ் மருவத்தூர் ஏரியில்  மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அச்சம்  அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம்,  சித்தமூர் ஒன்றியம் கீழ்மரு வத்தூர் ஊராட்சியில் குடி யிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஏரி யில் கலப்பதால் மாசடைந்து  ஏரியில் மீன்கள் செத்து மிதக்கின்றன.  கீழ்மருவத்தூர் ஊராட் சிக்குட்பட்ட  எஸ். வி . எஸ்.  நகர் மற்றும் மேல்மருவத் தூர் பகுதிகளில் இருந்து  வெளியேறும் கழிவுநீர் கீழ்மருவத்தூர் ஏரியில் கலப்பதால் ஏரி நீர் மாசு அடைகிறது. இதனால் ஏரி யில் இருந்த மீன்கள் இறந்து செத்து மிதிக்கின்றன.

ஏரியில் தொடர்ந்து கழிவு நீர் கலப்பதால் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் துர்நாற்றம் வீசு கிறது. சுகாதாரக் கேடும் உடல் நலக்கோளாறும் ஏற்பட வாய்ப்புள்ளதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்ற னர். பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரி நீரை பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நீர் மாசடைந்து வருவதால் விவசாயத்துக்கு ஏற்றதாக இல்லை. மேலும் தொடர்ந்து நீர் மாசுபடுமானால் குடி நீரும் மாசுபடும் ஆகவே, ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கீழ்மரு வத்தூர் மக்கள் சார்பில் சிபிஎம் கோரிக்கை விடுத் துள்ளது.