செங்கல்பட்டு, டிச.22- செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் சாலையோர வியாபாரிகளை உள்ளடக்கிய நகர்ப்புற விற்பனை குழுவை அமைத்திட வேண்டும் என முறை சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள சாலை யோர வியாபாரிகளை கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கிட வேண்டும், முறையான அறி விப்பின்றி பயமுறுத்துவது, பொருட்களை பறிமுதல் செய்வது, அப்புறப்படுத்துவது போன்ற செயல்களை கைவிடவேண்டும், சர்வதேச சுற்றுலாத் தளமான மாமல்லபுரம் சாலையோர வியாபாரிகளுக்கு பாது காப்பும், நிரந்தர இடமும் ஒதுக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல் பட்டு மாவட்ட முறைசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆட்சியர் அலு வலகம் அருகில் மாவட்டத் தலைவர் இ.ராம மூர்த்தி தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்ட செயலாளர் க.பகத்சிங்தாஸ், மாவட்ட துணை செயலாளர் பி.மாசிலாமணி, முறைசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இ.யோபுராஜ், கட்டு மான தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.பாபு, மாவட்டத் தலை வர் செல்வகுமார். மோட்டார் வாகன தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.நாராயணன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பாளர் எம்.கலைச்செல்வி உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து சாலையோர வியாபாரிகள் சங்க மாநில அமைப்பாளர் பி.கருப்பையன் பேசினார். முன்னதாக சங்கத்தின் நிர்வாகிகள் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினர்.