districts

img

செங்கல்பட்டு மாவட்டத்தில்  கடும் பனிப்பொழிவு

செங்கல்பட்டு, பிப். 5-  செங்கல்பட்டு மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு  ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.   கடந்த நான்கு நாட்களாக, பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.  இந்நிலையில் பனிப்பொழிவு இல்லாமல் இருந்தது. ஞாயிறன்று (பிப். 5) அதிகாலை பனிப்பொழிவு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளான, சென்னை  திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.  இதே போல் செங்கல்பட்டு,  படாளம்,  மதுராந்தகம், செய்யூர், அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர், கருங்குழி, , மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எதிரில் வரும் வாகனம் தெரியாததால் அவதிக்குள்ளாகினர்.

;