districts

img

பட்டதாரிகள் திறமையை ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளில் பயன்படுத்த வேண்டும்

செங்கல்பட்டு, நவ. 10- எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா  காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் வளாகத்தில்  நடைபெற்றது. மருத்துவம், பொது சுகாதாரம், அலைடு ஹெல்த் சயின்ஸ், மேலாண்மை, சட்டம், கலை, அறிவியல் படிப்புகளில் பி. எச்டி, எம்.பில், முதுகலை  மற்றும் இளங்கலை பட்டங்கள் வழங்கப் பட்டது. நிகழ்ச்சிக்கு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இணை வேந்தர் முனைவர் பா. சத்தியநாராயணன் முன்னிலை வகித்தார். துணைவேந்தர் முனை வர் சி. முத்தமிழ்ச்செல்வன் நிறுவனத்தின் ஆண்டறிக்கை வாசித்தார். பட்டமளிப்பு விழாவிற்கு எஸ்ஆர்எம் வேந்தரும், பெரம்ப லூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான டாக்டர் டி. ஆர். பாரிவேந்தர் தலைமை வாகித்து வரவேற்றார். விழாவில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சிறப்பு விருந்தி னராக பங்கேற்று பல்கலை தேர்வில் முதலி டம் மற்றும் இரண்டாமிடம் பெற்ற 208  மாணவ, மாணவியற்கு பதக்கம் பட்டங்கள் வழங்கி பட்டமளிப்பு விழா உரையாற்றுகையில் : எஸ்ஆர்எம் நிறுவனம் திறமையான மாணவர்களை உருவாக்கி வருகிறது, இங்கு மாணவர்கள் ஆரோக்கியமான சூழலுடன் பயிலும் வகையில் எஸ்ஆர்எம் வளாகம் பசுமையுடன், தூய்மையான வளா கமாக விளங்கி வருவது பாராட்டுக்குறியது என்றார்.  பட்டம் பெரும் நீங்கள் உங்களது  திறமைகளை ஆராய்ச்சி, கண்டுபிடிப்புக ளில் பயன்படுத்தவேண்டும். அதன் மூலம்  நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். அந்த வகையில் எஸ்ஆர்எம் நிறுவனம் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து  வருவது வரவேற்க தக்கது. பட்டம் பெற்ற பின் அரசு துறையிலோ தனியார் துறை யிலோ வேலை தேடும் மனப்பான்மை உரு வாக்கிவிடும், நீங்கள் வேலை தேடுபவர்க ளாக அல்லாமல் வேலை கொடுப்பவர்க ளாக உருவாக வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் பதிவாளர் முனைவர் சு.பொன்னுசாமி, மருத்துவம் மற்றும் உடல்நலம் இணை துணைவேந்தர் லெப்டினெண்ட் கர்ணல் டாக்டர் ஏ. ரவிக் குமார், தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர் கே. குணசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.