districts

img

அரசு ஊழியர் சங்க தலைவர் ஸ்ரீராம் காலமானார்

மதுராந்தகம், மார்ச் 20- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட துணைத் தலைவரும், தமிழ்நாடு கண் மருத்துவ உதவி யாளர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவருமான தோழர் எம்.என் ஸ்ரீராம் காலமானார். அவருக்கு வயது 59.  கடந்த சில நாட்களுக்கு முன்னர் பணிக்கு செல்லும் போது சாலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலை யில் சிகிச்சை  பலனின்றி ஞாயிறன்று (மார்ச் 19) இரவு உயிரிழந்தார்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளராகவும் திறம்பட செயலாற்றியவர். ஜாக்டோ -ஜியோ போராட்டத்தில் சிறை சென்றவர். தொழிற் சங்க பணிக்காக தன் வாழ்க்கையை அர்ப் பணித்துக் கொண்டவர். மதுராந்தகத்தில் அவ ரது இல்லத்தில் வைக்கப் பட்டிருந்த  உடலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் க.புருசோத்தமன், ஹரி கிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.மாசிலாமணி அர்ஜூன் குமார், மதுராந்த கம் வட்ட செயலாளர் எஸ்.ராஜா,  அரசு ஊழியர்  சங்கத் தின் மாவட்டத் தலைவர் பூங்குழலி, மாவட்ட செய லாளர் சி.முகமது உசேன். மாநில செயற்குழு உறுப்பினர் ரஞ்சித் சிங், கருவூலர் கணக்காளர் சங்கத்தின் மாநில பொரு ளாளர் லெனின், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத் தின் மாநிலசெயற்குழு உறுப்பினர் வி.பொன்னு சாமி தமுஎகச மாவட்டத் தலைவர்  சங்கரதாஸ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர் அலோ சியஸ் துரைராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் விக்டர் சுரேஷ்குமார், பரணிதரன், தாமோதரன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். திங்களன்று (மார்ச் 20) மாலை மதுராந்த கத்தில் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றது.