செங்கல்பட்டு, மார்ச் 24 செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக படகு குழாம் வளாகத்தில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமான பணி யினை வெள்ளியன்று ( மார்ச் 24) மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் (மார்ச் 24) துவக்கி வைத்தார். இந்த படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகை யில் மிதவை படகுகள், இயந்திர படகுகள், வேகமான இயந்திர படகுகள் இயக்கப்பட்டு வரு கின்றன. இந்த படகு இல்லத்தில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்ட மான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் பயணம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சியைச் சேர்ந்த கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷ்னல் நிறு வனத்தின் மூலமாக தனியார் மற்றும் பொது பங்களிப்பு மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூபாய் 5 கோடியாகும். தமிழ்நாட்டில் முதல் முறையாக மிதவை உணவக கப்பல் அமைக்கப்படுகிறது. இந்த மிதக்கும் உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளி ரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப் பட உள்ளது. முதல் தளம் திறந்த வெளி தளமாகவும், சுற்றுலா பயணிகள் மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பய ணிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இக்கப்பலில் சமைய லறை, சேமிப்பு அறை, கழிவறை மற்றும் இயந்திர அறை அமைக்கப்பட உள்ளது. இந்த கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் திருப் போரூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் இதயவர்மன் , முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலை வர் சங்கீதா மயில்வாகனன் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொது மேலாளர் லி.பாரதி தேவி , கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் ஜோஜி செபஸ்தியான் ஒஜெஸ் செபஸ்தியான், உள்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.