நலவாரிய பணிகள் அனைத்திற்கும் தொழிற்சங்க சான்றுகளை கட்டாயமாக்க வேண்டும், மனு கொடுத்த 30 நாட்களில் அனைத்து பண பயன்களையும் நல வாரியத்தின் மூலம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.சேஷாத்திரி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்ட செயலாளர் க.பத்சிங் தாஸ், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில கன்வீனர் எம்.தனலட்சுமி உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக சங்கத்தின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினர்.