districts

img

சிஐடியு மாநாடு கொடி பயணம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு

செங்கல்பட்டு, அக்.30- நாகர்கோயிலில் நடை பெறவிருக்கும் இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு 15 வது மாநில மாநாட்டில் ஏற்றப்பட விருக்கும் செங்கொடிக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் சிஐடியு மாநில செயலாளர் இ.முத்துக்குமார், மாநிலக்குழு உறுப்பினர் டி.ஸ்ரீதர், செங்கல்பட்டு மாவட்ட  தலைவர் கே. சேஷாத்திரி, மாவட்ட செயலாளர் க. பகத்சிங் தாஸ், பொருளாளர் என்.பால்ராஜ் உள்ளிட்ட பலர் மாநாட்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதனைத் தொடர்ந்து திருப்போரூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடை பெற்ற வரவேற்பில் மாவட்ட நிர்வாகிகள் கே.பழனிச்சாமி, ஜி.ராஜேஷ்வரி, சி.செல்வக் குமார், மின் திட்ட கோட்ட செயலாளர் எம்.மயில்வாக னன் ஆகியோர் பேசினர். செங்கல்பட்டு இராட்டி ணங்கினறு பகுதியில் நடைபெற்ற வரவேற்பில் மாவட்ட நிர்வாகிகள் எம். கலைச்செல்வி, இ.யோபு ராஜ், மனோமங்கையர்கரசி, மின்திட்ட செயலாளர் வி.தேவக்குமார் உள்ளிட்ட பலர் பேசினர். இதனைத் தொடர்ந்து மதுராந்தகம் பேருந்து நிலையம் எதிரில் நடை பெற்ற மாநாட்டு கொடி பயண வரவேற்பு பொதுக் கூட்டம் சிஐடியு மாவட்ட துணைத் தலை வர் பி.மாசிலாமணி தலை மையில் நடைபெற்றது.

;