செங்கல்பட்டு, ஜூன் 7- செங்கல்பட்டு மாவட்டத் தில் மகளிருக்கு கட்டண மில்லா பேருந்து பயண திட்டம் அறிமுகம் செய்யப் பட்ட பின்னர் இதுவரை 4 கோடியே 31 லட்சத்து 92 ஆயிரத்தி 978 நபர்கள் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத் துள்ள அறிக்கையில் இதில் பெண்கள் 4 கோடியே 27 லட்சத்து 64 ஆயிரத்தி 887 பேர். திருநங்கைகள் 42 ஆயிரத்தி 231பேர். மாற்றுத்திறனாளிகள் 3 லட்சத்து 53 ஆயிரத்தி 947 பேர். மாற்றுத்திறனாளிகள் 31,913 பேர் என அவர் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பின்னர் சட்டமன்ற பொதுத் தேர்த லில் வாக்குறுதி அளித்த தைத் தொடர்ந்து 5 முக்கிய திட்டங்களுக்கு கையெ ழுத்திட்டார். இதில் மகளி ருக்கான கட்டண மில்லா பேருந்து பயண திட்டம் மிகவும் முக்கியத்து வம் வாய்ந்தது. இத்திட்டத் தில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் இல்லத்தர சிகள், உயர் கல்வி பயிலும் மாணவிகள், பணிபுரியும் பெண்கள் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டண மில்லா பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள் ளது.
இத்திட்டத்தால் பெண் கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்துள் ளதாக அனைத்து தரப்பின ரும் பாராட்டி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்த வரையில் அனைத்து தரப்பு மக்களிட மும் மாநகர பேருந்து மற்றும் நகர பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் மிகுந்த வரவேற்பு அடைந்துள்ளது. பணிபுரியும் பெண்கள் மட்டுமின்றி, சுயதொழில் செய்யும் பெண்கள், இலவச பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் பெண்கள், குழந் தைகளை அரசு மருத்துவ மனைக்கு அழைத்து செல்லும் தாய்மார்கள், குழந்தைகளை நாள்தோறும் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லும் பெண்கள், வயதான முதியவர்கள் மற்றும் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டம் மிகுந்த பயனுள் ளதாக அமைந்துள்ளது என்றார்.
பயனாளிகள் பேட்டி
இதுகுறித்து கட்டண மில்லா பேருந்து பயணி ஒருவர் கூறுகையில், ஏழை குடும்பத்தை சார்ந்த எங்களுக்கு இத்திட்டத்தை அறிவித்ததன் காரணமாக தினமும் பயனுள்ளதாக இருக்கிறது. மாதந்தோறும் பேருந்து செலவிற்காக ரூபாய் 1500 க்கும் மேல் செலவழித்து வந்த நிலை யில் தற்போது போக்கு வரத்து செலவான ரூபாய் 1500 க்கும் மேலான தொகை எனக்கு மிச்சமாகிறது.
இந்த திட்டம் எனக்கும் என்னை போன்று பொரு ளாதாரத்தில் பின் தங்கி யுள்ள ஏழை குடும்பத்தை சார்ந்த பெண்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. எனது பய ணம் தொடரவும், இதன் மூலம் வருங்காலம் சிறக்க வும் செய்த தமிழக அரசிற்கு எனது சார்பாகவும், எனது குடும்பத்தினர் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
பொது போக்குவரத்து பயணங்கள் ஊக்குவிப்ப தும், பெண்கள் சமூக பொரு ளாதாரத்திற்கு உகந்ததாக அமைந்துள்ளதால் அனைத்து தரப்பு மக்களிட மும் மகளிருக்கான கட்டண மில்லா பயணத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற் றுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.