districts

செங்கல்பட்டு: ஒரே நாளில் 84 வழக்குகள் பதிவு

 செங்கல்பட்டு, மார்ச் 26-  செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது 84 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  செங்கல்பட்டு மாவட்டம், சென்னைக்கு மிக அருகில் இருப்பதால் வளர்ந்து வரும் நகரமாக இருக்கிறது. இந்நிலையில் மாவட்டத்திற்குட்பட்ட செங்கல்பட்டு காவல் உட்கோட்டம், மதுராந்தகம் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், அச்சரப்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைகளில் கஞ்சா, குட்கா, கள்ளச்சந்தையில் மது விற்பனை, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் சார்பில் சனிக்கிழமையன்று  (மார்ச் 25) சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் மாவட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் 8 கஞ்சா வழக்குகள், 14 குட்கா வழக்குகள்,5 லாட்டரி வழக்குகள்,1 சூதாட்டம் வழக்கு,  2 சட்டவிரோத மதுக்கடை வழக்குகள்,28 சட்டவிரோத கல் விற்பனை வழக்குகள்,26 சட்டவிரோத மது விற்பனை வழக்குகள் என மொத்தம் 84 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 நபர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.